ஊட்டி:நீலகிரி
 மாவட்ட மின் வாரியத்தின் காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம் மேற்பார்வை 
பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.
கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு 
கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ஆல்துரை, 
செயற்பொறியாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர் நுகர்வோர் 
பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""மின்வாரிய 
அலுவலர்களின் முன்னெச் சரிக்கை பணிகள் மற்றும் விரைவான மின்பராமரிப்பு 
பணிகளினால் கடும் மழை நேரத்தில் கூட மின்தடை மிக குறைவாக 
இருந்தது.கூடலூரில் நிலுவையில் உள்ள தனிமின் கோட்டம் அமைக்கும் பணிகளை 
நடைமுறைபடுத்த வேண்டும்; மானிய விலையில் சி.எப்.எல்., பல்புகளை வழங்க 
வேண்டும்,'' என்றார்.
தலைமை பொறியாளர் 
தங்கவேலு பேசுகையில்,""மின் அழுத்த குறைபாடுகள் தவிர்க்க, தற்போது 
கூடலூரில் டிரான்ஸ்பார்ம்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 
பணிகள் தொடரும். அரசு மின் பணியாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்து 
பணியமர்த்தும் பட்சத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நீங்கும். மின்வாரிய 
மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், ஊட்டியில் கட்ட நிதியாக 2 கோடி ரூபாய் 
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் 
தேவைப்படுகிறது. இதற்கான நிலம் கிடைக்காத காரணத்தால், கடந்த 2 ஆண்டுகளாக 
இப்பணி நிறைவடையாமல் உள்ளது. தகுதியுள்ள இடம் கிடைத்தால் மேற்பார்வை 
பொறியாளர் அலுவலகம் சொந்த கட்டித்தில் இயங்கும். 
 தரை வழியாக மின்கம்பிகள் 
அமைக்க நகர பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 
ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் தரையில் மின்கம்பிகள் அமைக்க 
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதற்கு ஒரு கிலோமீட்டர் 
தூரத்துக்கான செலவு 25 லட்சம் ரூபாயாகும். 
மானிய விலையில் சி.எப்.எல்., 
பல்புகள் வழங்க 30 லட்சம் ரூபாய் வரை நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
பொதுமக்கள் உரிய நேரத்தில் மின்கட்டணம் செலுத்தி, மின்சிக்கனம் செய்து 
மின்வாரிய செயல்பாட்டுக்கு உதவ வேண்டும்,'' என்றார்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
pls visit our webs
http://cchepnlg.blogspot.in/
http://cchepeye.blogspot.in/
http://consumernlg.blogspot.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக