செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

கருத்துகள்

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும். 

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

கருத்துகள்

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும். 
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ,

நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா??
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.      
FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.
வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்      "Pizza Hut, Dominos,    KFC, McDonalds,   Pizza Corner,    Papa John’s Pizza,
California Pizza Kitchen,    Sal’s Pizza"   இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.    ● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது      E 422 – ஆல்கஹால்   E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்  
E 471 – எருது & ஆல்கஹால்   E 476 – ஆல்கஹால்    E 481 – எருது & கோழி   
E 627 – ஆபத்தான கெமிக்கல்  E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி  
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!  இயற்கையாய் இயற்கையோடு வாழ..!    இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!  ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!  மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
நன்றி கடலூர் அரங்கநாதன்...

எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு


எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு



எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

மஞ்சூர் அருகே எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு  கருத்தரங்கினை நடத்தின.   நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை வகித்து பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு முலம் தரமற்ற பொருட்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்றார்.

தமிழ்நாடு  புதுசேரி நுகர்வோர்  அமைப்புகளின்  கூட்டமைப்பு (பெட்காட்) மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  நுகர்வோர்கள் சார்பான விழிப்புணர்வு மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.  இவற்றுக்கு பள்ளி நிர்வாகங்கள் குடிமக்கள் நுகர்வோர்  மன்றங்கள்   நாட்டு நலப்பணி திட்டங்கள் முக்கிய  பங்கு ஆற்றுகின்றன.   நாம் பயன் படுத்தும் பொருட்கள்  நமக்கு  பயன்  தருகிறதா என்பதையும்  பொருளின் தன்மையும்  அறிந்து பயன் படுத்த வேண்டும்.  விளம்பரங்கள் உண்மையா என பிரித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நுகர்வோர் மாவட்ட கூட்டமைப்பு பொதுசெயலாளர் வீரபாண்டியன் பேசும்போது  நுகர்வோருக்கு மிக பெரிய ஆயுதம் பில் எனவே அனைவரும் பில் வாங்க பழகி கொள்ள வேண்டும் என்றார்.   தற்போது புகார்கள் எளிய முறைகளில் பதிவு செய்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன இவற்றை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர் சிவராஜ் சிவபுத்ரா முன்னிலை வகித்தார்.  மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மணிகண்டன் வரவேற்றார்.முடிவில் பட்டதாரி ஆசிரியர் பழனிசாமி நன்றி .கூறினார்.



pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/