புதன், 21 அக்டோபர், 2015

CCHEP NLG YOUTH DEVELOPMENT AWARENESS GDR



pls visit our webshttp://cchepnlg.blogspot.in/http://cchepeye.blogspot.in/http://consumernlg.blogspot.in/

CCHEP NLG IODINE AWARNESS PROGRAMME MSS UPPATTY 20.10.15









அயோடின் குறைபாட்டால் இரும்பு சத்து குறைபாடு, ஏற்படுகிறது
அயோடின் உப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
பந்தலூா்,
அக். 23; பந்தலூா் அருகே உப்பட்டி எம் எஸ் எஸ் உயர்நிலைப்பள்ளியில் உலக அயோடின் தினத்தை
முன்னிட்டு அயோடின் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கவிதா தலைமை தாங்கினார்.
  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்
பேசும்போது அயோடின் பற்றாக்குறையால் உடல் வளர்ச்சி இன்மை, முன் கழுத்து கழலை,
  இரும்பு சத்து குறைபாடு, மந்த தன்மை, பிறவி குறைபாடுகள்,
ஊனதன்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
 
எனவே அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்துவதால் இதுபோன்ற குறைபாடுகளை களையலாம்
கடைகளில் எடுக்கபட்ட உப்பு மாதிரிகளில் 48 சதவீதத்தில் மட்டுமே போதுமான அளவு அயோடின்
உள்ளது. கடைகளில் எடுக்கப்பட்ட
  கல் உப்பில்
33.4 சதவீத அளவில் மட்டுமே அயோடின் உள்ளது. அயோடின் சத்து கடல்களில் உள்ள பவளபாறை
உள்ளிட்ட வற்றில் அதிகமாக உள்ளது.
  எனவே மீன்
உள்ளிட்ட கடல் வாழ் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். ஒரு நாளைக்கு நமக்கு 150 முதல்
200 மைக்ரோ கிராம் அளவு அயோடின் தேவை, உப்பு வாங்கும் முன் பாதுகாப்பான முறையில் உள்ள
உப்புகளை பார்த்து வாங்க வேண்டும் காலாவதி தேதி மற்றும் பாக்கெட்டில் சிரிக்கும் சூரியன்,
உணவு தர கட்டுபாட்டு பதிவு எண் போன்றவற்றை கவணித்து வாங்க வேண்டும்
   அயோடின் சத்து இல்லாத உப்புகளை தவிர்க்க வேண்டும்
என்றார்.
   நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்
மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

திங்கள், 19 அக்டோபர், 2015

CCHEP Ganthi seva maiyam Abdulkalam birthday pdr convent 19.10.15



கூடந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி கட்டுரை போட்டி நடத்தப்பட்டதுஇந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைப்பெற்றது   நிகழ்ச்சிக்கு பள்ளி
தலைமை ஆசிரியர் சகோதரி செலின் தலைமை
தாங்கினார்கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், பள்ளி
தாளாளர் சகோதரி எட்வின்  மகாத்மா
காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்அப்துல் கலாமின் சிறப்புகள் மாணவா்களின் பங்களிப்பு ஆகியன குறித்து தேவாலா ஜிடீஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசினார்தொடர்ந்து பள்ளியில் நடைப்பெற்ற
கட்டுரை போட்டியில் 6/8ம் வகுப்பு பிரிவில் முதல் இடம் நிவ்யா இரண்டாம் இடம் தமிழ்ச்செல்வி
மூன்றாம் இடம் வினித்தா 9/10ம் வகுப்பு பிரிவில் முதல் இடம் ரம்யா இரண்டாம் இடம் யுவராணி
மூன்றாம் இடம் கோகிலா பிடித்த மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் காந்தி
சேவை மைய நிர்வாகிகள் அகமது கபீர், செந்தாமரை
தனிஸ்லாஸ் உட்பட மாணவிகள் பலர் பங்கேற்றனர். 
முன்னதாக மாணவி சிவகாமி வரவேற்றார். 
முடிவில் நுகர்வோர் மன்ற ஆசிரியர் மார்ட்டின் நன்றி கூறினார்.




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்