வியாழன், 25 செப்டம்பர், 2014

மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட சுவைமிகு ஆரோக்கிய பானம் தேநீர்

மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட

சுவைமிகு ஆரோக்கிய பானம் தேநீர்


நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்குப் பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் ரத்தமும் இருக்கிறது’   '83 சதவிகித இந்தியர் களின் வீடுகளில் தேநீர் நுகரப்படுகிறது. விரைவில் தேயிலை தேசிய பானம் என அறிவிக்க படும் என எதிர்பர்ர்க்கபடுகிறது.

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் முதன் முதலாகத் தேயிலையைப் பயிரிட்டவர் மணிராம் திவான். இவர், சுதந்திரப் போராட்ட வீரரும்கூட.

pls visit our webs 

தேயிலை ஒரு பசுமைத் தாவரம். இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப்படுகிறது.

வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வகையான தேயிலைகள் பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் அவை வேறுபடுகின்றன.

தேயிலையின் இரு சொற் பெயர் Camellia Sinensis என்பதாகும்.

இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழைமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை பிரசித்தி பெற்றவையாகும்.

தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யப் படுகின்றன. அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.

தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர்.

தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள்...!

  
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க டீ உதவுகின்றது. ஒரு கப் டீ, யில் காபியை விடவும் குறைவாக 'காபினே' உள்ளது . எனவே கொழுப்பை பற்றி கவலைபட தேவையில்லை .
உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்தஅழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும்.


pls visit our webs 

தேயிலை (டீ-யின் ) மருத்துவ குணங்கள்

மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒரு கப் இஞ்சி டீ சாப்பிடுங்கள், கவலை காணாமல் போய்விடும்.   இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது.    நமக்கு துயரம், கவலை ஏற்படும் போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது. அதனால் தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள்
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது, இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது.   இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து, பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைக்கும்
ஜீரண சக்தி : நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது. மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.
எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
கேன்சர்: கிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.
நீரிழிவு: கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச் மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது. அத்துடன் இது 'இன்சுலீனின்' செயல்பாட்டையும்' அதிகரிக்கிறது.
இதயம்: இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL, டிரைகிளிசரைடுகளின் அளவைக்  கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL ன் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
ஆர்த்ரைட்டீஸ்: ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது.மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டு.
ஒபிஸிட்டி:  உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி,கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப்படுத்தவும் செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனும் குறைய வாய்ப்பிருக்கிறது.

pls visit our webs 
முதுமை: வயதாவதைத் தடுக்க முடியாது என்றாலும் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமை அடைவதை தடுக்கலாமே. உடல் திசுக்களில் உற்பத்தியாகும் 'ஃபிரீ ராடிகல்' எனப்படும் தனி உறுப்புகளை உறிஞ்சப்படுவதால் ஏற்படும் DNA சிதைவு தடுக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி கூடுதலாகிறது.  
பல்: கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு,பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.  வாயில் உற்பத்தியாகக் கூடிய 'பாக்டீரியா'க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும்,அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள்,வாய் துர்நாற்றம் போகவும் உதவுகிறது.
அழகு:  கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறது.
எடை குறைவு : க்ரீன் டீ-யில் உள்ள கேட்சின்ஸ் என்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் உடல்எடை குறைவுக்கு பெரிதும் உதவுகிறது.
வாதத்திற்கும் நிவாரணி   : பல காலமாக பால் கலக்காத ப்ளாக் டீ, க்ரீன் டீ அல்லது வெள்ளை தேநீர்பருகுபவர்களுக்கு 60 சதவீதம் வாதம் (strokes) ஏற்படாது.
நரம்பியல் நோய்களைத் தடுக்கும்    பல நரம்பியல் நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் தேநீர் முக்கியபங்கு வகிக்கிறது
புரோஸ்டேட் புற்றுநோய்   இத்தாலியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி, தினசரி மூன்று முறை க்ரீன்டீ பருகிய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுத்துநிறுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்த ஆண்களே இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள்.
எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்  க்ரீன் டீ பருகினால் எலும்புகளின் கனிம அடர்வும், வலிமையும்அதிகரிக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  அடிக்கடி தேநீர் பருகி வரும் அதிக வயது பெண்மணிகளுக்கு இடுப்பெலும்புஅதிக அடர்வுடன் இருப்பதை போல், தேநீர் பருகாத இளம் வயதுபெண்மணிகளுக்கு இருப்பதில்லை.
மொத்தத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் பருகினால்,
படிக்கும் திறனும் ஞாபகத் திறனும் அதிகரிக்கும்.
பயன்படுத்தும் முறை:   
தரமான தேயிலைத் தூளை ஒரு கோப்பைக்கு இரண்டு டீஸ்பூன் வீதம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கோப்பை தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த தண்ணீரில் தேயிலைத் தூளைப் போட்டு மூடி வைத்து உடனே அடுப்பை அனைத்து விட வேண்டும். ஓரிரு நிமிடம் கழித்து அதை வடிகட்டி, தேவைக்கு சர்க்கரையும் பாலும் சேர்த்துக்கொள்ளவும்.  
கூடுமானவரை பால் சேர்க்காமலே  இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.   இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
டீ-யை நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.   80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.  விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள், எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.    ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.



தேயிலை கலப்படம்   இன்று கலப்படமில்லாத டீயை நீங்கள் கடைகளில் குடிக்கிறீர்கள் என்பதற்கு உத்திரவாதம் உண்டா? நிச்சயமாக இல்லை. மரத்தூள், ஏதாவது ஒரு இலைதூள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டீத்தூள் , இவற்றுடன் செயற்கை சாயம்                      ( இது உணவிற்காகப் பயன்படுத்தப்படுவதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, உடைகளுக்காகப் பயன்படுத்தும் சாயமாககூட இருக்கலாம்) கலந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் சாய கலவையைதான் நீங்கள் சூடாக ஐந்து ரூபாய் கொடுத்து குடித்து மகிழ்கிறீர்கள்
தேயிலையில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
மேல இருக்குற ரெண்டு கிளாசுல, நமக்கு வலதுபுறம் இருப்பது நல்ல டீ. இடது புறம் இருப்பது கலப்படமான டீ. எப்படிக்கண்டுபிடிக்கலாம்?
pls visit our webs 
 ஒண்ணுமில்லை. டெஸ்ட் பண்ணனும்னு நினைக்குற தேயிலையை ஒரு ஸ்பூனில் எடுத்துக்கோங்க.  ஒரு கண்ணாடி டம்ளரில், சாதாரண தண்ணீரை ஊற்றிவிட்டு, அதில் அந்த தேயிலையைத் தூவுங்க. நல்ல தேயிலையாயிருந்தா, தேயிலையின் சாறு மட்டும் இறங்கி தண்ணீரின் நிறம் சிறிது மட்டுமே மாறும்.
கலர் சேர்த்த கலப்பட தேயிலையாயிருந்தா, தேயிலை தண்ணீரில் மூழ்கத் துவங்கும்போதே, கலர்கள் அந்த நீரில் வர்ண ஜாலமடிக்கும். கொஞ்ச நேரத்தில், அந்த டம்ளர் தண்ணீர் முழுவதுமே, இடது பக்க டம்ளரில் உள்ளதுபோல் கலராயிடும்.
தேயிலை துளை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும்.
வெண்மையான பீங்கான் ஓடு அல்லது கண்ணாடித் தகட்டின் மீது சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல் சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம் செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.

தேயிலைத் தூளில் எப்படிக் என்ன கலப்படம் செய்கிறார்கள்?
இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் 'திக்’ காகவே இருக்குமாம்!
முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!
மஞ்சனத்தி இலை - குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!
புளியங்கொட்டை: புளியங்கொட்​டையை லேசாக வறுத்து, ரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்து, தண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!
மரத்தூள், தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிர, டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.
மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல்,  நிறம் கூட்டப் பற்ற காய்ந்த இலை பருப்பின் தவிடு சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை  போன்றவையும் கலக்க படுகிறது
ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால், கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, கிட்னி பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
எது ஒரிஜினல்? தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று... இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.
உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். தேயிலையில் கலப்படம் செய்வதை தடுக்க தென்னிந்திய தேயிலை வாரியமும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவகமும் முயற்சிகள் எடுத்து வருகிறது.  நாமும் எச்சரிக்கையாக இருந்தால் அலுவலர்களுக்கு உதவியாக இருந்தால் தேயிலை கலப்படத்தினை தடுக்க முடியும்.
தேயிலையில் டீயில்  கலப்படம் இருப்பது தெரிந்தால்
தென் இந்திய தேயிலை வாரியம்,  பெட்போர்ட்,  குன்னூர்.
மாவட்ட ஆட்சியர்,  மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலர்,
அருகில் செயல்படும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள்
ஆகியோருக்கு தகவல் கொடுக்கலாம்.


pls visit our webs 

புதன், 17 செப்டம்பர், 2014

’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’

’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’


sagaayam4புதிதாக மடத்தில் சேர்ந்தவர்கள் துறவியிடம், ‘எந்த பிரச்சனை இல்லாமலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றீர்கள். பொதுமக்கள் உங்களைப் பார்த்து எப்படியெல்லாம் மரியாதை செலுத்துகிறார்கள்? எனவே தங்களைப் போல் நாங்களும் துறவியாக மாறுவதற்கு என்ன வழி?’ என்று கேட்டார்களாம்.
துறவியோ   ‘நீங்கள் மடத்தில் சேருவதற்கு என்ன காரணம்’ என்று கேட்டாராம்.
முதலாமன் ‘இல்லறத்தில் பிரச்சனை; அதனால் ஓடி வந்து விட்டேன்’ என்று சொன்னானாம்.
இரண்டாமவன் ‘கடன் தொல்லை; தப்பிக்கவே இங்கே வந்து சேர்ந்துள்ளேன்’.
மூன்றாமவன் ‘வியாதியால் அவதிப்படுகிறேன்; செலவு செய்து வைத்தியம் பார்க்க முடியவில்லை. தங்களிடத்தில் சேர்ந்தால் இலவச வைத்தியம் செய்து கொண்டு சௌகரியமாக காலத்தை கடத்தலாம்’.
இவர்களிடத்தே துறவி சொன்னாராம்: ‘உங்களது தற்போதைய நிலைமை மாறினால், நீங்கள் மூவருமே துறவறத்தில் நிலைத்து இருக்க மாட்டீர்கள். எந்த பிரச்சனையும் இல்லாதவன் மட்டுமே துறவியாக மாற முடியும்; எனவே நீங்கள் யாருமே துறவியாக வாய்ப்பில்லை’.
sagaayam1அரசாங்க பணி, பொதுச் சேவை செய்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்? ‘கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலோம்’ என்று நம் முன்னே நிற்கிறார் திரு.சகாயம் இ.ஆ.ப. அவர்கள். இவரின் பணி நேர்மை, ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், தாய் மொழிப் பற்று – இவைகளை நாம் அறிவோம்.
தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்டவளர்ச்சி அதிகாரி, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சிஅதிகாரி, திருச்சி உணவுப் பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர், கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி, தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநிலத்தேர்தல் ஆணையச் செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர் என தமது 23 ஆண்டு கால அரசாங்கச் சேவையில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியில் சேர்ந்த பொழுது, ஆலையின் உற்பத்தி திறன் 60%-க்கும் குறைவே. இவரது முயற்சியில் உற்பத்தி 110% ஆகவும், ஆலையைச் சுற்றி மரங்களை நட்டு கானகமும் உருவாக்கினார்.
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற உடன் தனது சொத்துக்கணக்கை வெளியிட்டார். ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தனது சொத்துக்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும், நான் அதையும் தாண்டி எனது சொத்து விபரத்தை மக்களுக்கும் சேர்த்து தெரியப்படுத்தியுள்ளேன் என்றார். இவர் மாவட்ட ஆட்சியாளராக செயலாற்றியபோது இவர் செய்த மக்கள் பணிகளை கோடிட்டு காட்ட இயலாது. உழவர் சந்தை போன்று உழவர் உணவகம் அமைத்து உடல் நலத்திற்கு ஏற்ற நமது தமிழ் பாரம்பரிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உழவர்களின் வயிற்றில் பால் வார்த்தார்.
மதுரைமாவட்டத்தில்இவர்பணியாற்றியபோது பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களைக் காப்பாற்றி பலம் வாய்ந்த தொழிலதிபரின் கோபத்திற்கு ஆளானார். தமிழர் பெருமை கூறும் பல மலைகளை கொள்ளையடித்தவன் அந்த கயவாளி, ஆனால் தனது செல்வாக்கினால் அந்த வழக்கிலிருந்து தப்பித்து மீதமிருக்கும் மலைகளையும் அழிக்க முயலுவான். அரசியல்வாதிகளால் அங்கிருந்து தூக்கியடிக்கப்பட்டு கைத்தறி கூட்டுறவுநிறுவனத்தின்இயக்குனரானார்.
திரு.சகாயம் 13 ஆண்டுகளாக நலிவடைந்த (=ஊழல்) நிர்வாகத்தை சீர்செய்து வருமானம் ஈட்டக்கூடியதாக மாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆடைகளில் நவீன வடிவமைப்புகளை கணிணி மூலம் உருவாக்க கட்டமைப்பைஉருவாக்கியது, நெசவாளர்களின் திறமைகளை ஊக்குவித்தது, பட்டுச்சேலை கனவுத் திட்டம் போன்ற முன்னேற்றத் திட்டங்களை திரு. சகாயம் அவர்கள் கொண்டு வந்தார்.
இவரின் தற்போதைய பணி மாற்றத்திற்கான காரணங்கள்:
sagaayam31) திருமண உதவி திட்டத்தில் வழங்கப்படும் தொகையில் பயனாளி ஒருவருக்கு ரூ 5000/-க்கு கோ-ஆப்-டெக்ஸ்-இல் பட்டுப் புடவை வாங்கிக் கொள்ள செல்லுபடியாகும் படிவங்களை வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இதன் மூலம் ஆண்டிற்கு ரூ 75 கோடிக்கு விற்பனையாகும். ஆனால் அரசாங்கம் பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்குவதிலேயே ஆர்வமாக இருந்திருக்கின்றது.
2) கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நகராட்சி கடை ஏலத்தில் கோ-ஆப்-டெக்ஸ் மேலாளாரை பங்கு பெறவிடாமல் உள்ளூர் அரசியல்வாதிகள் தாக்கி உள்ளார்கள். இந்த செய்தி ஜூனியர் விகடன் இதழில் மட்டுமே வெளியாகி இருக்கின்றது. எவ்வளவோ போராடியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; மேலாளரை ‘வற்புறுத்தி’ காவல்துறை முறைப்பாட்டை திரும்பப் பெற வைத்துள்ளார்கள். இது குறித்து மிகவும் கடுமையாக கண்டித்து முதன்மை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
3) பட்டு விற்பனையை விரிவாக்க தனியாக விற்பனை நிலையங்களை துவங்க வேண்டுமென்று ஆலோசனை தெரிவித்தார்.
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
4) நம் மாநில நெசவு தொழில் சரியாக விற்பனை இல்லாததால் பெரிதும் அல்லல்படும் போது, இலவச வேட்டி, சேலைகள் தமது நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினார். (இதில் கையூட்டிற்கு வழியில்லை; எனவே கொள்ளை அடிக்க இயலாது!). இவரின் ‘வேட்டிகள் தினம்’ அறிவிப்பு மூலம் கணிசமான அளவு விற்பனை நடைபெற்றது.
5) மேலும் விநியோகம் செய்யப்படாமல் தேங்கி கிடந்த கடந்த ஆண்டு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகளை, நடப்பு ஆண்டு கணக்கில் புதிதாக வாங்கியது போல ஏமாற்றியதை கண்டுபிடித்தார்.
6) மற்றபடி கட்சி அடியாட்களை வைத்து இவரை மிரட்டுவதற்கு ஏதுவாக, தில்லையாடி வள்ளியம்மை விற்பனை நிலையத்தில் அறை ஒதுக்க வேண்டும் என்று முயற்சித்து பார்த்தனர். இது குறித்து இந்த வார ஜூனியர் விகடன் இதழில் படித்திருப்பீர்கள்.
இறுதியாக, 8000 ஊழியர்களைக் கொண்ட இந்திய மருத்துவம்- ஓமியோபதித் துறைக்கு இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு, பணியில் சேருவதற்குள (48 மணிக்குள்) உதவியாளர் கூட இல்லாத அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக 24-வது தடவையாக பணி மாற்றத்திற்கு ஆளாகி இருக்கின்றார்.
மாற்ற முடியாதது எதுவோ?
sagayam5இதுநாள் வரை 24முறை பணிமாற்றம் செய்த அரசு இவரது நேர்மையை மாற்ற முடியுமா? இவர் போன்ற பலர் அதிகாரிகளாகவுள்ளனர். நாமக்கல், மதுரை, இன்று சென்னையிலும் சோதனை. ஆனால் வேதனை என்னவென்றால் நல்ல அதிகாரிகளை அரசுகள் இப்படி கேவலப்படுத்தி அவர்களை துன்பப்படுத்தும் போது, லஞ்சத்தை எதிர்க்கும் மக்கள் இந்த நேர்மையான அதிகாரிகளுக்கு ஆதரவாக வருவதில்லை. ஏன்? சுயநலம்தான்.
pls visit our webs http://cchepnlg.blogspot.in. http://cchepeye.blogspot.in. http://consumernlg.blogspot.in. 
எப்படி கூடங்குள மக்கள் அழிந்தால் எனக்கென்ன? எனக்கு மின்சாரம் வந்தால் போதும். தஞ்சைத் தரணியே அழிந்தாலும் தனது தேவைகளுக்கு எரிவாயுவும், எங்கிருந்தோ சோறும் வந்தால் போதும் என்கிற மனநிலையுள்ள மனிதர்களிடம் மனித நேயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? லஞ்சத்தை மட்டும் எதிர்க்கும் மேற்தட்டு மக்களின் மௌனம் நமது காதுகளை பிளக்கிறது… என்று இந்த மௌனங்கள் கலைகிறதோ அன்றுதான் இந்த நகரத்தினருக்கு லஞ்சத்தை எதிர்க்கத் தகுதி வரும்.
ஆக, துறவி வாழ்க்கை என்பது. ?

சனி, 13 செப்டம்பர், 2014

கடன் தள்ளுபடி

தன்னுடைய வாரிசுகளுக்கு தேவைக்கு அதிகமாகவே சொத்துகளை உயில் எழுதி வைத்த பிறகும் பிரச்னை தீராத மனிதனின் நிலை போல, ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர்.
"உன் வாரிசுகளுக்கு எதுவும் கொடுக்க முடியவில்லையே என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறாயா' என்று ஒரு மனிதனிடம் அவனது நண்பர் கேட்டார். அதற்கு அவன் பதில் கூறினான்: "அந்தக் கவலை எனக்கில்லை. நகரின் பிரதான பகுதியில் உள்ள கட்டடங்கள், வீட்டுமனைகள் என கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை எனது நான்கு குழந்தைகளுக்கும் எழுதிவைத்துவிட்டேன்'.
அடுத்தவர் பிரச்னையில் அதீத ஆர்வம்காட்டும் அந்த நண்பர் மீண்டும் கேட்டார்: "அப்புறம் என்ன கவலை?' நண்பர் பதிலளித்தார்: "இப்போதோ நான் பிச்சைக்காரன் போல உள்ளேன். என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை' என்றாராம்.
இந்த நகைச்சுவை துணுக்கை அண்மையில் ஒருவர் என்னிடம் கூறினார்.
உத்தேசமாக ரூ.45 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று ஆந்திர முதல்வரும், ரூ.19 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று தெலங்கானா முதல்வரும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்பது நகைச்சுவையான விஷயம் அல்ல.
தங்களின் தேர்தல் நேர வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இரு முதல்வர்களுக்கும் நெருக்கடி அதிகரித்தபோது, வழிகாட்டு நெறிமுறைகளை இருவரும் அறிவித்தார்கள். ஆனால், அதற்கான நிதி ஆதாரம் குறித்து அவர்கள் மூச்சு விடவே இல்லை. ஒரு ரூபாய்கூட இல்லாதவன் எப்படி கோடிக்கணக்கான சொத்துகளை கற்பனையிலேயே உயில் எழுதிவைத்தானோ, அதுபோலவே உள்ளது இவர்களது அறிவிப்புகளும்.
ஆந்திரத்தில் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் ரூ.1.5 லட்சம் வரையிலும், தெலங்கானாவில் ரூ.1 லட்சம் வரையிலும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அந்த நேரத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைப் பற்றி கவலைப்படாமல், கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகளை இருவரும் அள்ளி வீசிவிட்டனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை நெறிமுறைகள் தொடர்பான குறிப்பு பின்வருமாறு கூறுகிறது: போட்டியிடுபவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு, வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும், வாக்குறுதிகள் நம்பகத்தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், வாக்குறுதிகள் செயல்படுத்தத்தக்கதாகவும், அதற்கான நிதி ஆதாரம் குறித்தும் பொதுவான வகையில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ, அத்தகைய வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும்போது, அதை உண்மையிலேயே செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, அதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்டுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அப்போது, மக்களின் கோபத்தை திசை திருப்புவதற்காக, தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வர்த்தக வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் வில்லன்களாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
கொடுத்த கடன்களைத் திருப்பி வசூலிப்பதில் நீக்குபோக்குடன் நடந்து கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்த வேண்டும் என்று முதல்வர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் மூலம் அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில், நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியையும், வர்த்தக வங்கிகளையும் குறை சொல்வது நியாயமற்றதாகும். பொது மக்களிடம் இருந்து வைப்புத் தொகைகளைப் பெறும் வர்த்தக வங்கிகள், பணம் தேவைப்படுவோருக்கு அதில் இருந்து கடன் அளிக்கின்றன. பெறப்படும் வைப்புத் தொகைக்கும், அளிக்கப்படும் கடன் தொகைக்கான வட்டிக்கும் உள்ள வித்தியாச தொகையே வங்கிகளின் நிர்வாகச் செலவு, லாபமாக உள்ளது.
வங்கிகளில் கடன் பெறுபவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், வைப்புத் தொகை செலுத்துபவர்களின் தேவைகளை வங்கிகளால் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, கடன்களைத் தள்ளுபடி செய்வது என்பது வங்கிகளால் முடியாதது. அந்தக் கடன்களுக்கான உத்தரவாதத்தை அரசு ஏற்றால், வங்கிகள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.
வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராகக் கடன்களைத் தள்ளுபடி செய்யவோ, மறுசீரமைப்பு செய்யவோ வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொள்ள முடியாது. விவசாய உற்பத்தி, வழக்கத்தை விட 50 சதவீதம் குறைவாக இருந்தால் மட்டுமே விவசாயக் கடன்களை மறு சீரமைப்பு செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்க முடியும்.
கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளுக்கு உள்பட்டுள்ளதால், ஆந்திரத்தில் மொத்தம் உள்ள 653 மண்டலங்களில் 120-லும் (ஊராட்சி ஒன்றியம்), தெலங்கானாவில் 475 மண்டலங்களில் 100-லும் கடன் மறுசீரமைப்பு செய்ய ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டுள்ளது.
எனவே, அரசின் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று குற்றம்சாட்ட முடியாது. கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கும்படி அரசியல்வாதிகளிடம் ரிசர்வ் வங்கி எப்போதும் கூறியதில்லை.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்பதற்காக இவற்றைக் கூறவில்லை. இந்தத் திட்டங்கள் முறையாக சிந்தித்து அறிவிக்கப்படவில்லை என்பதற்காகவும், விவசாயிகளுக்கு குறைந்த அளவே நன்மை தரக் கூடியது என்பதற்காகவுமே இவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
முதலாவதாக, இப்போதைய கடன் தள்ளுபடியுடன் சேர்த்து, இனி எப்போதுமே விவசாயிகள் கடன் தள்ளுபடி தேவை என்று கோரிக்கை விடுக்காத வண்ணம் விவசாயத்தை மேம்படுத்த, இந்த இரண்டு மாநிலங்களிலுமே தெளிவான திட்டம் வகுக்கப்படவில்லை.
இரண்டாவதாக, இந்தக் கடன் தள்ளுபடித் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட (வங்கிகள் போல) நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். 73 சதவீத விவசாயிகள் தனியாரிடமிருந்தே கடன் பெறுவதால், அவர்களுக்கு இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை.
மூன்றாவதாக, ஒரு மாநிலத்தில் ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி என்றும், மற்றொரு மாநிலத்தில் ரூ.1.5 லட்சம் கடன் தள்ளுபடி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அறிவியல்பூர்வ அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படவில்லை.
இறுதியாக, இந்தத் திட்டத்துக்கு நிதி ஆதாரத்தைக் கண்டுபிடித்தால் கூட, இதை அமல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு விவசாயி ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றிருந்தால், கடன் தள்ளுபடி என்பது சிக்கலாகிவிடும்.
இந்த இரு மாநிலங்களிலும், கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு நன்மை செய்வதைவிட தீங்காகவே ஆகியுள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையில், கடன் பெற்ற விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
கரீப் பருவம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வங்கிகள் புதுக் கடன்களை வழங்க மறுத்துவிட்டன. இதனால், கரீப் பருவ சாகுபடிக்கு தனியார் நிறுவனங்களிடம் கடன் பெறும் நிலை அல்லது கரீப் பருவ சாகுபடியைக் கைவிட வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
இந்த இரு மாநிலங்களிலும் கிடைத்த அனுபவம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.
தேர்தலை மட்டுமே மனத்தில் கொள்ளாமல், நலிவுற்ற விவசாயிகளுக்கு சரியான விதத்தில் உதவ வேண்டும் என்ற உண்மையான நோக்கத்தில் இப்போதைய நிலையை அலசி ஆராய்ந்து ஒருங்கிணைந்த முழுமையான ஒரு திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

தன் மாநிலத்தில் இருந்த, இருக்கிற சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றி

சமீபத்தில் ஒரு பள்ளியில் சுதந்திர தின விழா, திருவிழா போலக் கொண்டாடப்பட்டது. மிகவும் உற்சாகமாகவும், ஆர்வத்துடனும் மாணவ, மாணவியர் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு, செல்போனின் தீமைகள் போன்றவை குறித்த நாடகங்கள் மற்றும் திரைப்பட ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, அரங்கத்தில் இருந்த பொதுமக்களும், மாணவ, மாணவியரும் ஆடாமல் அசையாமல் நின்று மரியாதை செலுத்தியபோது, மேடையின் பின்புறம் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தங்களின் வேடங்களைக் கலைப்பதிலும், அவர்களின் பெற்றோர்கள் அவற்றைச் சேகரித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்புவதிலும் குறியாக இருந்தனர்.
தேசிய கீதம் முடிந்தபின் ஒரு மாணவரிடம் தேசிய கீதம் பாடும்போது இப்படிச் செய்யலாமா எனக் கேட்டேன். அதற்கு அந்த மாணவர் "இவ்வளவு நேரம் சிறப்பாக நிகழ்ச்சிகள் செய்தோம். இப்போது தேசிய கீதம் போட்டுவிட்டார்கள் என்றால் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதானே அர்த்தம்? அதான் சீக்கிரமாக வேஷத்தைக் களைத்துக் கொண்டு கிளம்பத் தயாராகிறோம். இன்னைக்கு டி.வி.யில் நிறைய சிறப்பு நிகழ்ச்சிகள் இருக்கு' எனப் பதில் அளித்தார்.
மாணவர்களைப் பொருத்தவரையில், சுதந்திர தினம் என்பது மற்ற விடுமுறை தினங்களைப் போல ஒரு விடுமுறை தினம்தான். கூடுதல் போனஸாக அன்று தொலைக்காட்சியில் நிறைய சிறப்பு நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் காணலாம்.
இன்றைய இயந்திரமயமான உலகில் தேசிய கீதம் என்பது ஒரு பாடல்; அந்தப் பாடலைப் போடும்போது அசையாமல் நிற்கவேண்டும் என்றுதான் தெரிந்திருக்கிறதே தவிர, அது நமது தேசிய கொடிக்கும், நாட்டுக்கும் அளிக்கப்படும் மரியாதை என்பது தெரியவில்லை.
தேசிய கீதம் இசைக்கப்பட்டால், நிகழ்ச்சி நிறைவடைந்துவிட்டதாக அர்த்தம் என்ற அளவுக்குதான் தேசிய கீதத்தை பற்றி இன்றைய மாணவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
இதற்கு மாணவர்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. முன்பெல்லாம் திரையரங்குகளில் திரைப்படம் முடிந்தவுடன் தேசிய கீதம் ஒலிக்கும். ஆனால், யாரும் அதற்கு மதிப்பளிக்காததால் காலப்போக்கில் தேசிய கீதம் ஒலிபரப்புவது நிறுத்தப்பட்டுவிட்டது
இன்றைய தேதியில் தேசப்பற்று என்பது கிரிக்கெட் போன்ற ஒருசில விளையாட்டுகளில் மட்டும்தான் இருக்கிறது. இந்தியா எந்தவொரு நாட்டுடன் விளையாடினாலும் இந்தியாதான் ஜெயிக்க வேண்டும் என்ற (விளையாட்டுத்தனமான) தேசப்பற்றுதான் நிறைந்திருக்கிறது.
விளையாட்டை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, நிஜ நாட்டுப்பற்றைத்தான் விளையாட்டுத்தனமாக மாற்றிவிட்டோம்.
மாணவர்களின் இத்தகைய சிந்தனைகளுக்கு நமது கல்வி முறையும் ஒரு காரணம். பாடப் புத்தகங்களில் தேசத் தலைவர்களின் தியாகங்களைப் பாடங்களாக வைத்துள்ளோம் என்பது உண்மைதான்.
ஆனால், மாணவர்கள் அவற்றை மதிப்பெண் நோக்கில் படிக்கிறார்களே தவிர, உணர்ந்து படிப்பதில்லை. உணர்ந்து படித்தால்தான், சுதந்திரம் என்றால் என்ன, அதை அடைவதற்கு நாம் என்ன பாடுபட்டோம் என்பது அவர்களுக்கு விளங்கும்.
இன்று மாணவர்களிடம், "உனக்குத் தெரிந்த சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் பெயர்களைக் கூறு' என்றால், "மகாத்மா காந்தி', "நேரு', "சுபாஷ் சந்திரபோஸ்' என்று கூறுவதுடன் நிறுத்திக்கொள்கிறார்கள்.
தன் ஊரில், தன் மாவட்டத்தில், தன் மாநிலத்தில் இருந்த, இருக்கிற சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை.
தொலைக்காட்சிகள் நடிகர், நடிகைகளின் பேட்டிகளுக்குப் பதிலாக தியாகிகளை கௌரவிக்கும்விதமாக, அவர்களின் சுதந்திரப் போராட்ட அனுபவங்களை ஒளிபரப்பலாம்.
மாணவர்களுக்கு வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ ஏதேனும் ஒரு சுதந்திரப் போராட்டத் தலைவர் குறித்து சிறப்புரை நிகழ்த்தி, அது தொடர்பாக அவர்களிடம் கேள்வியெழுப்பி, மாணவர்களின் ஐயங்களைப் போக்கி, அவர்களைத் தெளிவடையச் செய்யவேண்டும்.
ஒவ்வொரு பள்ளியும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளை தங்கள் பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்து, அவர்களின் சுதந்திரப் போராட்ட அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளச் செய்யவேண்டும். இது மாணவர்களுக்கு நமது சுதந்திரத்தின் உன்னதத்தை உணர்த்தும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

அரசுப் பள்ளிகளின் தரத்தை மேலும் உயர்த்த கல்வித் துறை முன்வர வேண்டும்.

அரசு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை, சுயநிதிப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு தமிழக அரசு நிதி உதவி அளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகள் சிறப்பான வளர்ச்சியை பெற முடியும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலா 3 மாணவ } மாணவியர் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினைச் சேர்ந்த தலா 2 மாணவ } மாணவிகள் என மொத்தம் 10 பேருக்கு, தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்து படிக்க தமிழக அரசு நிதி உதவி வழங்குகிறது.
மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், பராமரிப்பு கட்டணம், விடுதிக் கட்டணம், சிறப்பு பயிற்சி கட்டணம் என ஆண்டொன்றுக்கு ரூ.28 ஆயிரம் வீதம், 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அரசின் இந்த உத்தரவு, மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர்களை சிறப்பாக உருவாக்கிய ஆசிரியர்களுக்கு மன வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.
பள்ளியில் நடத்தப்படும் பாடங்களைத் தவிர்த்து, சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் என பல்வேறு வழிகளில் பொதுத் தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்வதால் சில அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுயநிதிப் பள்ளிகள், மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு பாடங்களை முழுமையாக நடத்துவதில்லை. அதற்கு பதிலாக பத்தாம் வகுப்பு பாடங்களை, ஒன்பதாம் வகுப்பின் 2ஆம் பருவ தேர்வுக்கு பின் நடத்துகின்றன.
மேலும் சுயநிதிப் பள்ளிகளில், கல்வி தரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கின்றனர். 100 சதவீத தேர்ச்சி என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, தரத்தில் பின் தங்கிய மாணவர்களை வெளியேற்றிவிடுகின்றனர்.
இறுதிக் கட்டத்தில் அவர்களுக்கு புகலிடம் அளிக்கும் இடமாக அமைவது அரசு பள்ளிகள் மட்டுமே. அப்படி வந்து சேரும் மாணவர்களையும் இணைத்துக் கொண்டு, பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த நிலையில் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், 500 முதல் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தேர்வில் பங்கேற்று 98 முதல் 100 சதவீத தேர்ச்சியை பல அரசு பள்ளிகள் பெற்றுள்ளன என்பது முடிவுகளை உற்று நோக்கியவர்களுக்கு புரியும்.
20 முதல் 200 மாணவர்களுடன் பங்கேற்கும் சுயநிதிப் பள்ளிகளுக்கு மத்தியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்களை சிறப்பாக வழி நடத்தி சாதித்துக் காட்டிய அரசு பள்ளிகளின் தரம் மெச்சத் தகுந்ததே.
மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளி மாணவர்களை, பல்வேறு சலுகைகளுடன் தங்கள் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ப்பதற்கு தனியார் பள்ளிகள் போட்டிபோடுவது வழக்கம். தற்போது மாவட்ட வாரியாக 10 மாணவர்களை தேர்ந்தெடுத்து, பிரபல சுயநிதிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு அரசே உதவித் தொகை வழங்கி வருகிறது.
அரசின் இந்த நடவடிக்கையால், அரசுப் பள்ளிகளின் மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில் நியாயமாகவும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்துள்ள மாணவர்களை, தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளும் வெளியேற்றி விடுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த தரமான மாணவர்கள், சுயநிதி பள்ளிகளுக்குச் சென்றுவிட்டால் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவதைத் தடுக்க முடியாது. அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த முடியாத நிலை ஏற்படும்.
கடந்த காலத்தைவிடத் தற்போது அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் தரம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அனைத்து அடிப்படை வசதிகளும் அரசுப் பள்ளியில் கிடைக்க வேண்டும்.
அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து அரசு பள்ளிகளிலேயே படிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுயநிதி பள்ளியில் சேர்ந்து படிக்க வழங்கப்படும் உதவித் தொகையை, அவர்களுடைய தகுதிக்கான பரிசாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயநிதி பள்ளிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதிய சூழ்நிலையும், அங்கு கற்பிக்கப்படும் வழிமுறைகளும் தடுமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மன வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது, இந்த நடைமுறையை மாற்றி, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேலும் உயர்த்த கல்வித் துறை முன்வர வேண்டும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

திறமையான முதல்வராக உருவாகி மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை வகுத்துத் திறம்பட நிர்வகிப்பது வேறு

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அரசு கையகப்படுத்திய நிலத்தை டாடா நிறுவனம் உபயோகித்து புதிய வகை "நானோ' எனும் சிறிய மோட்டார் வாகனத்தைத் தயாரிக்க முயற்சித்தபோது, மிகப் பெரிய அளவில் நில உரிமையாளர்களின் எதிர்ப்பு உருவாகி, அந்தத் தொழிற்சாலையே குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டது.
அந்தப் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
புதிய அரசு பெரிய தொழிற்சாலைகளை ஆதரிக்காது என்ற எண்ணம் பரவலாகி, அந்த மாநிலத்தில் எந்தவிதமான புதிய தொழிற்சாலையும் தொடங்கப்படாததோடு, ஏற்கெனவே அங்கே இயங்கும் தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலைமை உருவாகியது.
இது அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் பாதித்தது. இதை சரி செய்யும் முதல் முயற்சியாக, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிங்கப்பூர் நாட்டிற்கு சென்று, அந்நாட்டின் பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
"கோல்டோர் எனும் ஊரில் 1,000 ஏக்கர் நிலம் புதிய தொழிற்சாலைகளை அமைக்க தயாராக மாநில அரசின் வசம் உள்ளது' என அறிவித்துள்ளார். கோல்டோர் எனும் கிராமம், மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. கொல்கத்தா நகரிலிருந்து 185 கி.மீ. தூரம். இந்த நிலம் 950.17 ஏக்கர் பரப்பளவு உள்ளது.
1965-ஆம் ஆண்டு இந்த நிலத்தில் 310 ஏக்கர் பரப்பளவில் சணல் பயிரிட்டு, அம் மாநிலத்தின் மிக முக்கியமான விவசாயப் பயிரான சணலின் உற்பத்தியையும், திறனையும் எப்படி பெருக்கிக் கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டது.
ஆனால், எந்த வேலையும் நடைபெறாமல் செயலற்ற நிலையில் அந்த மையம் இருந்து வந்தது. எனவே, அந்த நிலப்பரப்பை மேற்கு வங்க தொழில் வளர்ச்சி கழகத்துக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை உடனடியாக புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் அன்னிய நிறுவனங்களுக்கு வழங்க முடியுமா என்பதை அறிய ஒரு ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த சில நிருபர்கள் விசாரணையில் இறங்கி தகவல்களை சேகரித்தனர்.
அதன்படி, இந்த மாநில முதல்வர் குறிப்பிட்ட 1,000 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் 600 குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிசைகளை அமைத்துள்ள ஆக்ரமிப்பாளர்கள் பிழைப்பு தேடி கிராமப்புறங்களிலிருந்து குடி பெயர்ந்து கோல்டோர் நகருக்கு வந்தவர்கள்.
இந்த ஆக்ரமிப்பாளர்கள் கூறுகின்றனர்: "முதல்வர் மம்தா பானர்ஜி, நிலங்களை கைப்பற்றி கார் தொழிற்சாலையை சிங்கூரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர். அப்படிப்பட்டவர் எங்களை நிலத்திலிருந்து வெளியேற்றித் தொழிற்சாலைகளை அமைக்க உத்தரவிடுவார் என நாங்கள் நம்பவில்லை'.
மேலும், சணல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விவசாய ஆராய்ச்சி மையம், 15 பெரிய கட்டடங்களை இந்த நிலத்தில் கட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடங்களை இடித்துத் தரைமட்டமாக்குவதும், இங்கே பணி செய்யும் அரசு ஊழியர்களை வேறு இடங்களுக்கு மாற்றி உத்தரவிடுவதும் உடனடியாக நடக்கும் காரியமல்ல எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலப் பகுதிக்கு மின்சாரம் வழங்கும் சந்திரக் கோனா சாலை துணை மின் நிலையம் 29 கி.மீ. தூரத்தில் உள்ளது. சம்மபந்தப்பட்ட 1,000 ஏக்கர் நிலத்தில் கனரக தொழிற்சாலைகளைத் தொடங்க 132 கே.வி. திறனுடனான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
இதற்காக ஒரு துணை மின்நிலையம் இந்த நிலத்தின் அருகில் உடனடியாக நிறுவப்பட வேண்டும். உயரழுத்த மின்சாரக் கம்பிகளுடன் 29 கி.மீ. தூரத்திலிருந்து மின்சாரத்தை இந்த நிலப் பகுதிக்கு கொண்டு வரவும், அங்கேயே ஒரு துணை மின் நிலையத்தை உருவாக்கவும் குறைந்தது 6 மாத காலம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆக, இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களுள்ள ஒரு நிலத்தை ஏற்றுக் கொண்டு, கனரகத் தொழிற்சாலைகளை எங்கள் மாநிலத்தில் நிறுவுங்கள் என சிங்கப்பூர் அரசையும் அங்குள்ள பெரிய தொழில் நிறுவனங்களையும் மேற்கு வங்க முதல்வர் கேட்டுக் கொள்வது நம்மில் பலருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை உருவாக்குகிறது.
மம்தா பானர்ஜி தூய்மையான, ஊழலற்ற நடைமுறைகளை கடைப்பிடிக்கும் ஓர் அரசியல் தலைவர். நேர்மைக்கும் எளிமைக்கும் பெயர் போன தரமான இடதுசாரித் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்து, அதில் வெற்றி பெற்று அரசமைத்தவர்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், நிர்வாகத்தை சரியான முறையில் புரிந்து கொண்டு தனது வளர்ச்சித் திட்டங்களை வகுத்துள்ளாரா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக அடித்தட்டு மக்களின் ஆட்சியாக நடந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில், அரசு ஊழியர்களையும், நில ஆக்கிரமிப்புகள் செய்துள்ள கீழ்த்தட்டு மக்களையும் சட்ட விதிமுறைகளின்படி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவில்லை.
உதாரணமாக, இந்த நிலத்தில் உள்ள 600 குடிசைகளுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நம் மாநிலத்தில் கிராம அதிகாரிகளால் வழங்கப்படும் பி-மெமோ எனப்படும் தாக்கீது கூட வழங்கப்பட்டிருக்கவில்லை.
எனவே, சட்ட விதிமுறைகளின்படி அங்கே நில ஆக்கிரமிப்புகளை அகற்றும் பழக்கமும் கிடையாது. இந்த நிலைமை அந்த மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும், தாலுகாக்களிலும், கிராமங்களிலும் நிலவுகிறது எனலாம்.
எனவே, முதல்வர் மம்தா பானர்ஜி தொழில் தொடங்க சிங்கப்பூர் நாட்டவரை அழைக்கும் முன்னரே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கொல்கத்தா மாநில தலைமை செயலகத்தில் கூட்டி, நிலத்தின் தன்மை, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால், அவர் நடவடிக்கையைத் தொடங்கியிருந்தாலும் பலன் இருந்திருக்காது. ஏனெனில் அந்த மாநில உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி பல காலம் ஆகிவிட்டது எனக் கூறுகிறார்கள் அங்குள்ள அதிகாரிகள்.
மேலும், குறிப்பிட்ட அந்த 1,000 ஏக்கர் நிலப் பகுதிக்கு செல்ல 29 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை என்.எச். 60-லிருந்து பிரிந்து கிராமப்புற சாலையில் பயணம் செய்ய வேண்டும். அந்த சாலை மிகவும் மோசமான மேடு பள்ளங்களுடன் இருப்பதால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல இடுபொருள்களையும், கருவிகளையும் ஏற்றிச் செல்லும் பெரிய லாரிகள் பயணிக்க முடியாது.
29 கி.மீ. நீள சாலையின் கடைசி 11 கி.மீ. தூரம் நான்கு மீட்டர் அகல ஒருவழிச்சாலை. தொழிற்சாலைகளை இணைக்கும் சாலைகள் குறைந்தபட்சம் 14 மீட்டர் அகலத்துடன் நான்குவழிச் சாலைகளாக இருக்க வேண்டியது அவசியம்.
இதுபோன்ற சாலைகளை அந்தப் பகுதியில் அமைக்க, குறைந்தது ஒன்பது மாதங்கள் ஆகும் எனக் கூறுகிறார்கள் அந்த பகுதியின் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.
மேற்கு வங்க அரசே நினைத்தாலும் அந்த மாநிலத்தில் சில பிரச்னைகளை சமாளிப்பது மிகவும் கடினம். உதாரணமாக, இந்த சாலை செல்லும் பல இடங்களில் மிக நெருக்கமான குடிசைகள், கான்க்ரீட் வீடுகள் உள்ளனவாம்.
அந்த வீட்டு உரிமையாளர்களிடமிருந்து வீடுகளை வாங்கி, பின் அவற்றை அப்புறப்படுத்தி சாலைகளை அமைப்பது முடியாத ஒரு காரியம் எனக் கூறுகிறார்கள்.
அடுத்து இந்த 1,000 ஏக்கர் நிலத்தில் பல பெரிய தொழிற்சாலைகளை நிறுவ அடிப்படை தேவைகளில் ஒன்று தாராளமான நீர் வரத்து. அந்த நிலத்திலிருந்து 18 கி.மீ. தூரத்தில் சிலபதி எனும் நதியிலிருந்துதான் தண்ணீர் கொண்டு வரப்பட வேண்டும். சிலபதி நதி எல்லா பருவங்களிலும் நீர்வரத்துள்ள ஒரு நதியல்ல.
தொடர்ந்து தாராளமாக நீர்வளம் தேவைப்படும் கனரக தொழில்களைத் தொடங்க, அந்த நிலப் பகுதியிலிருந்து 55 கி.மீ. தூரத்தில் உள்ள குப்னராயன் எனும் வற்றாத நதியிலிருந்து நீர் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆக மொத்தத்தில் இவை எதுவுமே சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, இந்த விவரங்கள் முழுமையும் சிங்கப்பூரின் பிரதமர், அந்நாட்டின் உயர் அதிகாரிகள் மற்றும் பெரிய தொழிலதிபர்களுக்குத் தெரிய வரும்போது, நம் நாட்டு அரசியல் தலைவர்களைப் பற்றியும் ஆட்சிமுறை பற்றியும் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படை அம்சமான அதிகாரிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய "தெளிவுரை'யை மேற்கு வங்க முதல்வர் பெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
நேர்மையான அரசியல்வாதியாக இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராவது வேறு; திறமையான முதல்வராக உருவாகி மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை வகுத்துத் திறம்பட நிர்வகிப்பது வேறு. இதனை நிரூபித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/