சனி, 18 அக்டோபர், 2014

உலக உணவு தினத்தினை முன்னிட்டு உணவு பாதுகாப்பும், இயற்கை உணவும்

உதகை அருகே சிவசைலம் சாம்ராஜ் மேல்நிலை பள்ளியில் உலக உணவு தினத்தினை முன்னிட்டு உணவு பாதுகாப்பும், இயற்கை  உணவும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு  கருத்தரங்கு நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நீலகிரி  மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு  ஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை தாங்கினார்.  பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார்.  பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற மாணவி சந்தியா வரவேற்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் இன்று நம்மை நோயாளிகளாக மாற்றி வருகிறது.  விளம்பரங்களில் வரும் உணவுகளையும் ஊட்டசத்து பாணங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம்.  இவற்றினால் எந்த பயனும் இல்லை. அதுபோல பதப்படுத்தபட்ட உணவுகள்,   ரெடிமேட் உணவுகள் பலவற்றிலும்  கெடாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள் உடலுக்கு பதிப்பையும் நோயினை உருவாக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.  நொறுக்கு தீனியாக உண்ணக்கூடிய சிப்ஸ், லேஸ் உள்ளிட்டவைகளினால் இதய கோளாறுகள் மற்றும் கேன்சர் வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.  எனவே  இவற்றை தவிர்த்து சாதாரண உணவுகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.   http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசும்போது   தற்போது  சைவ உணவுகளை தவிர்த்து அசைவ உணவுகளை அதிகம் உண்ணுகிறோம்.  கோழி ஆடு மாடு உள்ளிட்டவைகளை உணவுக்கு வளர்க்க செலவிடும் உணவு வகைகள் அளவுகள் மக்கள் பலருக்கு உணவு அளிக்க முடியும்,  மேலும் தற்போது உணவுக்கு வளர்க்கபடுபவை மருந்துகள் இட்டு வளர்க்கபடுகிறது இவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது. சிறு தானிய உணவுகள், தாவர உணவுகள் அதிக பயன்கள் தரக்கூடியது என்றார்.
நிலகிரி நுகர்வோர் கூட்டமைப்பு செயலாளர் வீரபாண்டியன் பேசும்போது இயற்கை உணவுகளில் மட்டுமே அதிக ஊட்ட சத்துகள் உள்ளது.  உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்து கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் பெறலாம்.  உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி, கலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனம், ஊட்டசத்து விவரங்கள், சேர்க்கபட்டுள்ள பொருட்களின் விவரங்களை பார்த்து வாங்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் நுகர்வோர் மன்ற மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற மாணவன் கோகுல் நன்றி கூறினார்.
pls visit our webshttp://cchepnlg.blogspot.inhttp://cchepeye.blogspot.inhttp://consumernlg.blogspot.in/

கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,

கூடலூர் :"நுகர்வோர்களிடம் வசூல் செய்யும் கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் மாவட்ட கலெக்டருக்கு  அனுப்பியுள்ள மனு:

கடந்த 2011 ஆண்டு முதல் மாநில அரசு,கேபிள் கார்ப்பரேஷன் துவங்கி குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கி வருகிறது. "கேபிள் இணைப்புக்கு மாத கட்டணம் 70 ரூபாய் வசூல் செய்து, அதில் 20 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்; முதலில் 90 சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்,' என தெரிவிக்கப் பட்டது. தற்போது 120 சேனல்கள் வரை  வழங்க அரசு வலியுறுத்தி வருகிறது.  
ஆனால், பல பகுதிகளில் குறைந்த சேனல்கள் வழங்குவதுடன், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு பதில் மாதம் 100 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதியில் இதே நிலை தொடர்கிறது. இவ்வாறு வசூல் செய்யப்படும் கட்டணத்துக்கு ரசீது வழங்க வேண்டும் என தமிழ்நாடு கேபிள் டிவி கழகம் அறிவுறுத்தி அதன் மாதிரியும் அனைத்து ரேசன் கடைகளிலும் ஒட்டி வைக்க பட்டுள்ளது ஆனால் இதுவரை யாரும்  ரசீது  வழங்குவதில்லை.  பல செய்தி சேனல்கள் மற்றும் விளையாட்டு சேனல்கள் இருட்டிப்பு செய்யப்பட்டு ஒளிபரப்ப படுகிறது.  உள்ளூர் சேனல்கள் அதிக அளவில் ஒளிபரப்பபடுகிறது. 
எனவே, நீலகிரியில் செயல்படும் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து, அதற்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்கவும்; அனைத்து சேனல்களையும் முறையாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதே செயல்கள் தொடரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப்படும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

சனி, 11 அக்டோபர், 2014

சாக்லேட் திங்க ஆசையா?

சாக்லேட் திங்க ஆசையா?

 

குழந்தைகளே! அம்மாவிடம் அடம் பிடித்து காசு வாங்கியவுடன் என்ன செய்வீர்கள்? கடைக்கு ஓடி கண்ணாடிக் குடுவைக்குள் இருக்கும் கண்ணைப் பறிக்கும் வண்ணக் கலரில் உள்ள சாக்லேட்டைத் தானே வாங்குவீர்கள். அந்த வண்ணக் கலர் பிளாஸ்டிக் காகிதத்தையா உண்கிறீர்கள்? இல்லை, உள்ளே உள்ள சாக்லேட்டைத் தானே சாப்பிடுகிறீர்கள்.
Sea Turtle caught in the plastic bag
ஏன் வெறும் 3 கிராம் எடை கொண்ட சின்ன சாக்லேட் துண்டுக்கு கலர்கலராய் 3 வகை உறைகள் தெரியுமா? எல்லாமே நம்மளை ஏமாற்றத்தான். நாம் அந்த சாக்லேட் உறைக்கும் சேர்த்துத்தான் காசு கொடுக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. சாக்லேட்டை வாங்கிய உடனேயே எங்கே அதைப் பிரிக்கிறோமோ அங்கேயே விட்டெறிந்து விடுகிறோம் இல்லையா? நீங்கள் விட்டெறிந்த அந்த உறையை, குப்பையை உங்கள் வயதை ஒத்த ஏழைச் சிறுவர், சிறுமிகள் பொறுக்கி எடுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் அதை என்ன செய்கிறார்கள்? உடைந்த கண்ணாடி, காகிதம், பிய்ந்த செருப்பு, பிளாஸ்டிக் பை இவற்றை பழைய பொருட்கள் வாங்கும் கடையில் விற்றுவிடுவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கிறது.

சரி, அந்த சாக்லேட் உறையை யாரும் பொறுக்காமல் விட்டால் என்ன ஆகும்? காற்றடிக்கும் திசையில் எல்லாம் பறந்து நாம் நடக்கும் பாதையெல்லாம் இறைந்து கிடப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணோடு மண்ணாக மக்காமல், அப்படியே கிடந்து நிலத்தை பாழ்படுத்திக் கொண்டிருக்கும். அப்படியில்லாத நிலையில், சாக்கடையில் விழுந்து அடைத்துக் கொள்ளும். பிறகு சுத்தம் செய்யும்போது ஆற்றில் சேர்ந்து பின்னர் கடலுக்குச் சென்றுவிடும். இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அந்த சாக்லேட் தாளை மீன்கள் சாப்பிட்டுவிட்டு வயிற்றில் சிக்கி இறந்து போகவும் நேரலாம்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் தின்றுவிட்டுத் தூக்கி எறியும்போது எத்தனை பிரச்னைகள் ஏற்படும்? உங்கள் ஊரில், ஏன் இந்தியாவிலுள்ள அனைத்து சிறுவர், சிறுமியரும் சாக்லேட் தின்றுவிட்டு உறையை தூக்கி எறிந்தால் ஏற்படும் பிரச்னை எவ்வளவு பெரியது. எவ்வளவு குப்பைகள் சேரும். அதெல்லாம் சாக்கடையில் விழுந்தால் சாக்கடை முழுமையாக அடைத்துக் கொள்ளும், இல்லையா. பிறகு வீட்டைச் சுற்றி சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்கும். துர்நாற்றத்தையும், கொசுத் தொல்லையையும் பொறுத்துக் கொள்ள முடியாது. நிம்மதியாக படிக்க முடியாது, சாப்பிட முடியாது, நிம்மதியாக தூங்கவும் முடியாது. சரி, அத்தனை குப்பையும் கடலில் கலந்தால், எத்தனை மீன்கள், உயிரினங்கள் சாகும்? மற்றொரு உயிர் அழிவதை நாம் விரும்புவதில்லை, இல்லையா.
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
சரி, அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல், குப்பைத் தொட்டியில் போடப் பழக வேண்டும். நீங்களே அட்டைப் பெட்டியில் குப்பைத் தொட்டி செய்து, அதில் பழைய காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில் போன்ற வீட்டில் தேவைப்படாத பொருட்களைச் சேகரித்து விற்கலாம். அதில் கிடைக்கும் பணத்தை நோட்டு வாங்கவோ, புத்தகம் வாங்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். அப்பா, அம்மாவும் பாராட்டுவார்கள்.
இனிமேல் காசு கிடைக்கும்போது, சாக்லேட் வாங்குவதற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அவற்றின் தோலும் எளிதில் மக்கிப் போகும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

வெள்ளி, 10 அக்டோபர், 2014

தேயிலை தேநீர் தரம் மற்றும் மருத்துவ பயன்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/





















கூடலூர் பாத்திமா  பெண்கள்  மேல்   நிலை பள்ளியில் தேயிலை தேநீர் தரம் மற்றும் மருத்துவ பயன்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு  நடைபெற்றது தென்னிந்திய தேயிலை வாரியம் குன்னூர், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில்   நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் உதவி மண் வள பாதுகாப்பு அலுவலருமான  சுந்தர லிங்கம் தலைமை தாங்கினார்.  நிகழ்ச்சியை கூடலூர் குடிமை பொருள் தனி வட்டாச்சியர் முத்து  துவக்கி வைத்தார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்து பேசும்போது இந்தியாவில் 83 சதவீத மக்கள் தேநீரை குடிக்கின்றனர்.  இதில் நல்ல சுவை மிகுந்தது நீலகிரி தேயிலை.  இந்த பெயரை தக்க வைத்து கொள்ள கலப்பட தேயிலையை கண்டறிந்து களைவது  அவசியமாகிறது.  கலப்பட தேயிலை கண்டறிந்தால் மாணவர்கள் புகார்  தெரிவிக்க வேண்டும் என்றார்.

தேயிலை வாரிய உதவி இயக்குனர்  C .K  ரமேஷ் பேசும்போது   தேயிலை தற்போது வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வகையான தேயிலைகள் தயாரிக்க படுகின்றன.  தேநீர் அருந்துவதால்  உற்சாகம் கிடைகிறது, நரம்பு மண்டலம் சீரிய முறையில் செயல்படுகிறது, இதயத்தினை பலபடுத்துகிறது,  மாணவர்கள் அதிகம் தேநீர் அருத்துவதால் படிப்பில்  கவனம் செலுத்துவதோடு நினைவாற்றலும் பெருகும், எலும்புகளை ஊக்க படுத்துகிறது இதுபோன்று  பல்வேறு பயன்கள் நமக்கு கிடைக்கிறது.  அனைத்து வகையான தேநீரும் ஒரே மாதிரியான பயன்களை தருகிறது.  அனைவரும் தேநீரை அருந்தலாம் என்றார்.

தேயிலை வாரிய தொழிற்சாலை அலுவலர் சுனில்குமார் பேசும்போது இந்தியா, சீனா, இலங்கை, Uk, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தேயிலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.  தேயிலை சட்டத்தில்  தேயிலை துளில் கலப்படம் செய்வது தண்டனைக்குரியது என குறிப்பிடபட்டுள்ளது .  தேயிலையில் கலப்படம் இருப்பின் பச்சை தண்ணீரில் சாயம் வருவதன் மூலமும்,  வெள்ளை பேப்பரில் சாயம் படிவத்தை வைத்தும் கண்டறியலாம்.  மேலும் உள்ளங்கையில் தேயிலை துளை வைத்து கசக்கி பின்னர் முகரும் போது தேயிலையின் வாசனை வரும் இதனை வைத்தும் தரமான தேயிலையை அறியலாம்.  என்றார்.

உதவி மின் செயற் பொறியாளர் முரளிதரன் பேசும்போது  இன்றைய மாணவர்கள் ஐஸ் கிரிம், மற்றும் குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர்.   இவற்றில் சேர்க்கப்படும் சேர்மங்கள் உடலுக்கு தீமை விளைவிக்க கூடியது.  எனவே இவற்றை தவிர்த்து தரமான தேயிலையை பயன்படுத்த வேண்டும் என்றார்.

கூடலூர் மருத்துவ அலுவலர் விவேக் பேசும்போது தேயிலையினை நன்கு கொதித்த நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து குடிக்கலாம்.  தேநீரை பால் சேர்க்காமல் குடிப்பதும்,  சர்க்கரைக்கு பதில்  தேன் அல்லது வெல்லம் கலந்து அருந்துவது அதிக பலனை தரும்.  தொடர்ந்து தேநீர் அருந்துவதால்  எடைகுறையும். கொழுப்பு சத்து குறையும் என்றார்.

நிகழ்ச்சியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த பட்டது.  கூடலூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராபெர்ட், பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி மேரி, பள்ளி தாளாளர் எலிசபெத், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுவீட்டி, கவிஞர் கந்தசாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலாளர் மாணவி சங்கீதா வரவேற்றார்.  முடிவில் கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் பொன் கணேஷன் நன்றி கூறினார்.






தேயிலை தேநீர் தரம் மற்றும் மருத்துவ பயன்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

கூடலூர் பாத்திமா  பெண்கள்  மேல்   நிலை பள்ளியில் தேயிலை தேநீர் தரம் மற்றும் மருத்துவ பயன்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு  நடைபெற்றது தென்னிந்திய தேயிலை வாரியம் குன்னூர், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில்   நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் உதவி மண் வள பாதுகாப்பு அலுவலருமான  சுந்தர லிங்கம் தலைமை தாங்கினார்.  நிகழ்ச்சியை கூடலூர் குடிமை பொருள் தனி வட்டாச்சியர் முத்து  துவக்கி வைத்தார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்து பேசும்போது இந்தியாவில் 83 சதவீத மக்கள் தேநீரை குடிக்கின்றனர்.  இதில் நல்ல சுவை மிகுந்தது நீலகிரி தேயிலை.  இந்த பெயரை தக்க வைத்து கொள்ள கலப்பட தேயிலையை கண்டறிந்து களைவது  அவசியமாகிறது.  கலப்பட தேயிலை கண்டறிந்தால் மாணவர்கள் புகார்  தெரிவிக்க வேண்டும் என்றார்.

தேயிலை வாரிய உதவி இயக்குனர்  C .K  ரமேஷ் பேசும்போது   தேயிலை தற்போது வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வகையான தேயிலைகள் தயாரிக்க படுகின்றன.  தேநீர் அருந்துவதால்  உற்சாகம் கிடைகிறது, நரம்பு மண்டலம் சீரிய முறையில் செயல்படுகிறது, இதயத்தினை பலபடுத்துகிறது,  மாணவர்கள் அதிகம் தேநீர் அருத்துவதால் படிப்பில்  கவனம் செலுத்துவதோடு நினைவாற்றலும் பெருகும், எலும்புகளை ஊக்க படுத்துகிறது இதுபோன்று  பல்வேறு பயன்கள் நமக்கு கிடைக்கிறது.  அனைத்து வகையான தேநீரும் ஒரே மாதிரியான பயன்களை தருகிறது.  அனைவரும் தேநீரை அருந்தலாம் என்றார்.

தேயிலை வாரிய தொழிற்சாலை அலுவலர் சுனில்குமார் பேசும்போது இந்தியா, சீனா, இலங்கை, Uk, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தேயிலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.  தேயிலை சட்டத்தில்  தேயிலை துளில் கலப்படம் செய்வது தண்டனைக்குரியது என குறிப்பிடபட்டுள்ளது .  தேயிலையில் கலப்படம் இருப்பின் பச்சை தண்ணீரில் சாயம் வருவதன் மூலமும்,  வெள்ளை பேப்பரில் சாயம் படிவத்தை வைத்தும் கண்டறியலாம்.  மேலும் உள்ளங்கையில் தேயிலை துளை வைத்து கசக்கி பின்னர் முகரும் போது தேயிலையின் வாசனை வரும் இதனை வைத்தும் தரமான தேயிலையை அறியலாம்.  என்றார்.

உதவி மின் செயற் பொறியாளர் முரளிதரன் பேசும்போது  இன்றைய மாணவர்கள் ஐஸ் கிரிம், மற்றும் குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர்.   இவற்றில் சேர்க்கப்படும் சேர்மங்கள் உடலுக்கு தீமை விளைவிக்க கூடியது.  எனவே இவற்றை தவிர்த்து தரமான தேயிலையை பயன்படுத்த வேண்டும் என்றார்.

கூடலூர் மருத்துவ அலுவலர் விவேக் பேசும்போது தேயிலையினை நன்கு கொதித்த நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து குடிக்கலாம்.  தேநீரை பால் சேர்க்காமல் குடிப்பதும்,  சர்க்கரைக்கு பதில்  தேன் அல்லது வெல்லம் கலந்து அருந்துவது அதிக பலனை தரும்.  தொடர்ந்து தேநீர் அருந்துவதால்  எடைகுறையும். கொழுப்பு சத்து குறையும் என்றார்.

நிகழ்ச்சியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த பட்டது.  கூடலூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராபெர்ட், பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி மேரி, பள்ளி தாளாளர் எலிசபெத், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுவீட்டி, கவிஞர் கந்தசாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலாளர் மாணவி சங்கீதா வரவேற்றார்.  முடிவில் கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் பொன் கணேஷன் நன்றி கூறினார்.






pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

வியாழன், 2 அக்டோபர், 2014

https://www.flickr.com/photos/92160462@N02/8376173068/in/photostream/

http://www.veethi.com/kamarajar-life-Photo-collection-in-kamarajar-house-virudhunagar/PH3301



pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

"Public figures K. Kamaraj





கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

























































































pls visit our webs

http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/