செவ்வாய், 27 ஜனவரி, 2015

இலவச கண் சிகிச்சை முகாம் - பந்தலூர் 31.01.2015

இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் அரசு மருத்துவ மனையில் 31.01.2015  சனிக்கிழமை அன்று  காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.  கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சரிட்டபிள்  ட்ரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்தும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் உதகை அரசு மருத்துவ மனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு அனைத்து விதமான கண் நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிப்பதோடு கண் புரை நோயினால் பாதிக்கபட்டவர்களுக்கு  உதகை அரசு மருத்துவ மனையில்  முறையான லேசர் முறையில் இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்து தரப்படும். கண் புரை அறுவை சிகிச்சை தேவை உள்ளவர்கள் குடும்ப அட்டை நகல் எடுத்து வரவும்.  உதவிக்கு ஆள் தேவை படின் உடன் ஒருவரை அழைத்து வரவும்.  கண் புரை அறுவை சிகிச்சை, மருந்துகள், கருப்பு கண்ணாடி, உணவு ஆகியன இலவசமாக வழங்கப்படும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக